மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 29.03 அடியாக சரிந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாதது, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகச் சரிந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நொடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக, நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீர்த் தேவைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால், திங்கள்கிழமை காலை நீர்மட்டம் 29.03 அடியாகச் சரிந்தது. மேலும், நீர் இருப்பு 7.14 டி.எம்.சி.யாக இருந்தது.