சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் தாக்கல் செய்த வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது.
சமத்துவ மக்கள் கட்சி மாற்று வேட்பாளரின் மனுவையும் தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பட்டிருப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.