சென்னை: முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்படுவதாக கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கருணாஸ் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளதாதக தகவல் வெளியாகியுள்ளது.
திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கருணாஸ்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவரான நடிகர் கருணாஸ், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், எனக்கு எம்.எல்.ஏ., என்ற அதிகாரத்தைக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் இல்லாத பேரவைக்கு வரவே எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு இந்த அதிகாரமே வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.