38 மீனவர்கள், 133 படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் கே. பழனிசாமி

இலங்கைச் சிறையில் வாடும் 38 மீனவர்கள், அவர்கள் சிறைபிடித்து வைத்துள்ள 133 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
38 மீனவர்கள், 133 படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் கே. பழனிசாமி

இலங்கைச் சிறையில் வாடும் 38 மீனவர்கள், அவர்கள் சிறைபிடித்து வைத்துள்ள 133 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் என மொத்தம் 12 மீனவர்களை இலங்கைக் கடற்படை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறைபிடித்துச் சென்றிருப்பதை இந்தக் கடிதம் மூலம் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
அண்மையில் மதத்ய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு, இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதலுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்திருந்த நிலையில், 12 மீனவர்கள் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு, மீன்பிடி படகுகளை விடுவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசு கொண்டிருப்பது, மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை இலங்கை கடற்படை நிறுத்திக்கொள்ளவும், தெளிவான உறுதியான தகவலை இலங்கை அரசுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும்.
மேலும் இலங்கைச் சிறையில் வாடும் 38 மீனவர்களையும், அங்கு சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள 133 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பிரதமர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ரூ. 1,650 கோடியை விரைந்து ஒதுக்குவதற்கான நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com