ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: டிடிவி தினகரன் கொடுக்கும் முதல் வாக்குறுதி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், தொகுதி மக்களுக்கு தனது முதல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: டிடிவி தினகரன் கொடுக்கும் முதல் வாக்குறுதி


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், தொகுதி மக்களுக்கு தனது முதல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை ஆர்.கே.நகரில் திறந்த ஜீப்பில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த டிடிவி தினகரன், செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெறுவது உறுதி என்று கூறினார்.

மேலும், இன்று வெளியாக உள்ள தேர்தல் அறிக்கை பற்றி கேட்டதற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அளித்த 57 ஆயிரம் மனுக்களையும் நான் பார்த்துள்ளே.ன அதில் பெரும்பாலாவை, சொந்தமாக குடியிருப்பு வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எனவே, வரும் 4 ஆண்டுகளில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் சொந்த வீடு என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவோம் என்பதே எனது முதல் வாக்குறுதி.

மேலும் ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டை அகற்றி, குப்பை மேடு இருக்கும் 29 ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தி, குடியிருப்புகளை கட்டி, அழகான பூங்காக்களை ஏற்படுத்துவோம். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குப்பை மேட்டை அகற்றுவோம்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு  அளிக்க நடவடிக்கை எடுப்போம். இங்கு ஏராளமான அடிப்படை பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை நான் நன்கு அறிவேன். அதனை நீக்கி அம்மாவின் கனவை, இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று அவர் நினைத்தாரே அதை செய்து காட்டுவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com