இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள், 16 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.