பண்ருட்டி: பண்ருட்டி அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
பண்ருட்டி காமராஜர் தெரு, 3வது தெருவில் குழந்தையின் அழுகுரல் கேட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் தேடிப் பார்த்ததில், பிறந்து ஒரு வார காலமே ஆன பெண் குழந்தை சாலையோரம் அனாதையாகக் கிடந்தது
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை மீட்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.