மதுரையிலிருந்து மும்பைக்கு புதிய விமான சேவை தொடக்கம்

மதுரையிலிருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதிய விமான சேவையை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.

மதுரையிலிருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதிய விமான சேவையை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு வர்த்தக மேலாளர் வி.ராஜா தலைமை வகித்தார். பொது மேலாளர் யு.செனாய், மேலாளர் ஆர்.சுந்தரேசன், ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி பரேஸ்கட்ஜர், மக்கள் கண்காணிப்பக நிர்வாகி ஹென்றி ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். மதுரையிலிருந்து மும்பைக்கு முதல் பயணச்சீட்டை யூனியன் வங்கித் தலைவர் அருண்திவாரி பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து தலைமை வர்த்த அதிகாரி ஜெயராஜ் சண்முகம் கூறியது:
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மதுரையிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. தினமும் மதுரையிலிருந்து பகல் 1.35 மணிக்கு புறப்படும் விமானம் 3.25 மணிக்கு மும்பை சென்றடையும்.
பின்பு மும்பையிலிருந்து அந்த விமானம் புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு புதுதில்லி சென்றடையும். அதே போல தினமும் காலை 8 மணிக்கு புதுதில்லியில் இருந்து புறப்படும் விமானம் 10.55 மணிக்கு மும்பை வந்து, அங்கிருந்து புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு மதுரை வந்தடையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com