தேர்தல் தோல்வி பயத்தால் முன்னுக்கு பின்னாக பேசி ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று டிடி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆர்.கே. நகரில் இன்று வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் அம்மா வேட்பாளர் டிடி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் தோல்வி பயத்தால் முன்னுக்கு பின்னாக பேசி ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
ஆர்.கே. நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது இலக்கு. மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யவே அமைச்சர்கள் பிரசாரம். கொடுங்கையூர் குப்பைக்கிடங்கை தூய்மைப்படுத்தி பூங்காவாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.