ஆபாச படம் எடுத்து மிரட்டியதால்10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: பள்ளித் தாளாளர் தலைமறைவு

சென்னையில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக,

சென்னை: சென்னையில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, தலைமறைவாக இருக்கும் தனியார் பள்ளி தாளாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
 கோயம்பேட்டை அடுத்த சின்மயா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர், அப் பகுதியில் ஒரு பள்ளியை நடத்தி வருவதோடு, அந்தப் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். அவரது மனைவி சசிகலா.
சசிகலாவின் அண்ணன் கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் வசித்து வருகிறார். அவரது 15 வயது மகள், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர், புதன்கிழமை திடீரென வீட்டில் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
 அவரது வீட்டை சோதனை செய்ததில், இறந்த மாணவி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், தனக்கு இறப்புக்கு காரணம் சரவணன் தான் காரணம் என்றும், அவர் தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மாணவிக்கு மிரட்டல்: இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
 இறந்த மாணவிக்கு, சரவணன் நெருங்கிய உறவினர் என்பதால் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அப்படி சில மாதங்களுக்கு முன்பு மாணவி ஒரு நாள் அவர் வீட்டுக்குச் சென்றபோது, சரவணன் அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை அருந்திய மாணவி மயக்கமடைந்ததும், சரவணன் பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவி மயக்கம் தெளிந்தபோது, சரவணன் மிரட்டி அவரை அனுப்பியுள்ளார்.
 இந்த நிலையில், அண்மையில் அந்த மாணவி உடல்நலக் குறைவு காரணமாக பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது  தெரிய வந்தது. அதுகுறித்து பெற்றோர், மாணவியிடம் கேட்டபோது, மாணவியின் கர்ப்பத்துக்கு சரவணன் தான் காரணம் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
 இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், சரவணனிடம் தட்டிக் கேட்டனர். அப்போது சரவணனும், சசிகலாவும் அவர்களை அவதூறாக பேசி, மிரட்டினராம். இதற்கிடையே சரவணன், மாணவியிடம்  ஆபாசமாக இருப்பது போல செல்லிடப்பேசி மூலம் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகக் கூறி மிரட்டினாராம்.
அதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்துள்ளார்.
பள்ளி தாளாளர் மீது வழக்கு: இச் சம்பவங்களை அந்த மாணவி, தனது கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சரவணன், சசிகலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் அவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com