வேலூர்: சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை ஏதும் வழங்கப்படவில்லை என பெங்களூரு சிறைத் துறை கூடுதல் ஐ.ஜி. வீரபத்திரசுவாமி கூறினார்.
வேலூருக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறையினுள் சிறப்புச் சலுகை ஏதும் வழங்கப்படவில்லை. சிறைக் கைதிகளுக்கான சலுகை மட்டுமே அவருக்கு வழங்கப்படுகிறது. வெளியில் இருந்து உணவுப் பொருள்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் அவர், யாரைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார் என்றார்.