சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த 2014ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து நீதித்துறையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுச் சென்றார். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கர்நாடகாவின் குலுவாடி ரமேஷ் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.இவர் இதற்கு முன்னதாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவராவார்.