சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஆளும்கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்து இருக்கும் வேளையில், ஆட்சி செயல்படும்விதம் குறித்து குழப்பமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டமானது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையில் காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் முழுமையடையவில்லை.
எனவே அதனை நடத்துவது தொடர்பான விவாதங்கள் இந்த கூட்டத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.