"பிளஸ் 1 பாடத் திட்ட மாற்றம் குறித்து விரைவில் முடிவு'

பிளஸ் 1 பாடத் திட்ட மாற்றங்கள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
"பிளஸ் 1 பாடத் திட்ட மாற்றம் குறித்து விரைவில் முடிவு'

பிளஸ் 1 பாடத் திட்ட மாற்றங்கள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், அளித்த பேட்டி:

தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களில் சிறப்பிடம் பெறுவோருக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வித் உதவித் தொகை வழங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்விச் செயல்பாடுகள் உள்பட தனித்திறமைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வழியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
பிளஸ் 1 பாடத் திட்டம்: பிளஸ் 1 பாடத் திட்டத்தை மாற்றுவது தொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவரும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com