தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு 92.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதல் இடத்தையும், வேலூர் மாவட்டம் 84.96 சதவீதமும், கடலூர் மாவட்டம் 84.86 சதவீதமும் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.