தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் மொழிப் பாடத்தில் ஒருவர் கூட முழு மதிப்பெண் எடுக்கவில்லை என்பது வர்த்தத்திற்குரியதாகும்.