சென்னை: போக்குவரத்து தொழிளார்கள் வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 23 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேருந்துகள் இயக்கம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.