முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்திதல் உள்ள இருவரது வீடுகள் உட்பட 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனைக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
ப. சிதம்பரம் தில்லியில் உள்ள நிலையில் அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.