சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்துக்கு தனிப் பாதை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்குத் தனிப் பாதை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்துக்கு தனிப் பாதை: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்குத் தனிப் பாதை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்குரைஞர் சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலின்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்குத் தனிப்பதை என்பது முக்கியத் தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com