சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில், இந்தாண்டு ஆங்கிலத்தில் ஒருவர் கூட முழு மதிப்பெண் எடுக்கவில்லை.
ரேங்க் முறை இல்லாமல் முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்தாண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 ஆகும். அதில் மாணவிகள் 96.2 சதவிகிதமும், மாணவர்கள் 92.5 சதவிதமும் பெற்றுள்ளனர்.
ஆனால், ஆங்கிலத் தேர்வு கடினமாக இருந்ததால் இந்தாண்டு பொதுத்தேர்வில் ஒருவர் கூட முழு மதிப்பெண் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.