நீலகிரி: உதகையில் 121-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பேசினார்.
121-வது மலர் கண்காட்சி மிகச் சிறப்பாக அமைந்ததாகவும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என கூறினார். மேலும், மானிய கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்த அனைத்துத் திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் நீட் நுழைவுத்தேர்வு தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அதுகுறித்து தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.