சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தாண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 ஆக உள்ளது.
இதில், காது கேளாதோர், கண் பார்வையற்றோர் என மாற்றுத்திறனாளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம்
தமிழ் - 96.7 %
ஆங்கிலம் - 97.67 %
கணிதம் - 65.57 %
அறிவியல் - 99.51 %
சமூக அறிவில் - 98.38 %