10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி திருநங்கை அல்ல என விளக்கம்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா திங்நங்கை என்று பள்ளி நிர்வாகம் தகவறுதலாக செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா திங்நங்கை என்று பள்ளி நிர்வாகம் தவறுதலாக செய்தி வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 12,187 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பில் திருநங்கை தேர்ச்சி பெற்றுள்ளார் என்று தவறுதலான செய்தியை பள்ளி நிர்வாகம் இன்று காலை வெளியிட்டது.

இதையடுத்து, பென்னாகரத்தைச் சேர்ந்த மாணவி சங்கீதா திருநங்கை இல்லை என தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த தவறுதலான தகவலால் குழப்பம் நேர்ந்துள்ளது. பின்னர், பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோர்களிடம் மண்ணிப்பு கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com