பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 94. 4 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியானது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியானது.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 12,187 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று காலை வெளியானது.

இதில் மொத்தம் 94. 4 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்தவரையில் 92.05 சதவீதமும், மாணவிகளை பொறுத்தவரையில் 96,02 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட 3.7 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com