முதல் 3 இடங்களை வெளியிடக் கூடாது: பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12, 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 12, 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.

தமிழகத்தில் 12, 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட, பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது என்று அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

அதன்படி, முதல் 3 இடங்களை வெளியிட்டு விளம்பரம் செய்வதை மாவட்டத்தின் அனைத்து தனியார் பள்ளிகளும் கைவிட வேண்டும். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com