கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணி காரணமாக கூடங்குளம் 2வது அணுஉலையில் கடந்த 5ஆம் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.