தமிழகத்தில் மட்டுமதான் ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள் தேர்வாகி உள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை கீழடியில் பிரேமலதாவுடன் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. விரைவில் ஆட்சி கலைந்து பொதுத்தேர்தல் வரும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவுக்கு பாதிப்பு கிடையாது. தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.