நாகர்கோவில்: தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் கால் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்
நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் எந்த கட்சிக்கும் கால் இல்லை. காலூன்றிய திமுகவும் தற்போது காலை இழந்து நிற்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காக கருணாநிதிக்கு வைரவிழா நடத்தி எப்படியாவது ஒரு கூட்டணியை பிடித்துவிடலாம் என திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.