சென்னை தலைமைச் செயலகம் முன் 6 இளைஞர்கள் தீக் குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகம் முன் வெள்ளிக்கிழமை சுமார் 30 இளைஞர்கள் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர் தேர்வில் வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். அப்போது திடீரென திருவண்ணாமலை பாண்டியன் (26), அமரன் (20), விழுப்புரம் சதீஷ் (27), நீலமேகம் (27), காஞ்சிபுரம் குணசேகரன் (27) உள்ளிட்டோர் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலின் மீது ஊற்றி தீக் குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.