குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக வரும் 23ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
அன்றைய தினம் உதகையில் உள்ள தனியார் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்கும் அவர் மறுநாள் தில்லி புறப்பட்டு செல்கிறார். இதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மே 23-ஆம் தேதி காலை கோவை வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்குப் பிற்பகலில் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்று பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.