குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க உதகை பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க உதகை பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க உதகை பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உதகையில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று உதகை வருகிறார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தப் பள்ளி. இந்நிலையில், நிகழ்ச்சியில் நடைபெறும் செய்திகளை சேகரிக்க உதகை செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இராணுவத்தினரிடம் கேட்ட போது,
கடந்த மாதம் வெல்லிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி கல்லூரியில் விரும்பதகாத சம்பவங்கள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உதகை செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com