குமரி பகவதியம்மன் கோயிலில் 29இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வரும் 29ஆம் தேதி வைகாசி விசாக 10 நாள் திருவிழா தொடங்குகிறது.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வரும் 29ஆம் தேதி வைகாசி விசாக 10 நாள் திருவிழா தொடங்குகிறது.

முதல்நாள் திருவிழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு திருக்கொடியேற்றம், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் வீதியுலா ஆகியன நடைபெறும்.

விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், சமய உரை, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், அம்மன் வீதியுலா வருதல் ஆகியன நடைபெறும். 5ஆம் நாள் திருவிழாவான ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
தேரோட்டம்:9ஆம் நாள் திருவிழாவான ஜூன் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை தொடர்ந்து மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல் ஆகியன நடைபெறும்.

தெப்பத் திருவிழா:10ஆம் நாள் திருவிழாவான ஜூன் 7ஆம் தேதி காலை 6.30 மணிக்கு அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 8 மணிக்கு நர்த்தன பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் பா. பாரதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் வி.என். சிவகுமார், பகவதியம்மன் கோயில் மேலாளர் பி. ஆறுமுகதரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com