குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையம் வந்த அவருக்கு தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஆட்சியர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் ஹெலிகாப்டர் மூலம் உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்குச் செல்கிறார்.
பிறகு அங்கிருந்து கார் மூலம் செல்லும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனிடையே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகையையொட்டி உதகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.