புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு முதல்வர் நாராயணசாமி 2017-18 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 17-ம் தேதி ஜிஎஸ்டி சட்ட முன்வடிவு மசோதா நிறைவேறறப்பட்டது.
இந்நிலையில் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பேரவை அலுவல் எதுவும் நடைபெறாது. 24-ம் தேதி மீண்டும் அவை கூடும் என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக 24-ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும்.
வரும் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலாளர் வின்சென்ட் ராயர் திங்கள்கிழமை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பின்னர் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். வரும் ஜூன் 16-ம் தேதி வரை (சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) பேரவைக் கூட்டம் நடைபெறும்.