சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கணக்கில் வீக்காக இருப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு முகாமில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சட்டப்பேரவையைக் கூட்டினால் பெரும்பான்மையை இழந்து விடுவோமோ என்று ஆளும் கட்சியினர் பயப்படுவதாக ஸ்டாலின் பேசி இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் தங்களுக்கு 123 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டி விடுமா? என்றவர் மு.க.ஸ்டாலின் கணக்கில் வீக்காக இருப்பதாக கூறினார்.