தமிழ்நாடு
முதல்வரை சந்திக்க அய்யாகண்ணுவுக்கு அனுமதி மறுப்பு: போலீஸாரிடையே வாக்குவாதம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அய்யாகண்ணுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அய்யாகண்ணுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தனர்.
தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திக்க அய்யாகண்ணு அனுமதி கேட்டார். ஆனால், முதல்வரை சந்திக்க முன் அனுமதி பெறவில்லை என்று கூறி, முதல்வரை அய்யாகண்ணு சந்திக்க அனுமதி அளிக்க முடியாது என்று போலிசார் கூறினர்.
இதனால், காவல்துறைக்கும், அய்யாகண்ணு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவை, அய்யாகண்ணு சந்தித்துப் பேசினார்.