இன்று வடலூர் தரும சாலையின் 151-ஆவது ஆண்டு தொடக்க விழா

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையின் 151-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை (மே 25) நடைபெறுகிறது.

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையின் 151-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை (மே 25) நடைபெறுகிறது.
வள்ளலார் சுவாமிகள், வடலூரில் 23.5.1867 அன்று, (வைகாசி மாதம் 11-ஆம் தேதி) சத்திய தரும சாலையை நிறுவினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு, சத்திய தரும சாலை ஏற்படுத்தப்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதல் தரும சாலையில் தினமும் மூன்று வேளைகளும் அனைவருக்கும் அன்னம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 151-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கடந்த மே 18 முதல் 20 வரை சத்திய தரும சாலையில் அருட்பெருஞ்சோதி மகாமந்திர பாராயணமும், மே 21 முதல் 24 வரை சத்திய ஞான சபையில் திருஅருள்பா முற்றோதலும் நடைபெற்றன. புதன்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை திருஅருள்பா சிறப்பு இன்னிசை நாடகம், வில்லுப்பாட்டு ஆகியவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மே 25) அதிகாலை 5 மணிக்கு தரும சாலையில் அகவல் பாராயணம், காலை 7.30 மணிக்கு சன்மார்க்கக் கொடி உயர்த்துதல், காலை 9 முதல் 11 மணி வரை வில்லுப்பாட்டு, காலை 11 முதல் பகல் 12 மணி வரை ஜீவகாருண்ய ஒழுக்கம் (சத் விசாரம்), பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்புச் சொற்பொழிவு, தொடர்ந்து, திருஅருள்பா இன்னிசை நிகழ்ச்சி, சன்மார்க்கத் தொண்டு, நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய மருத்துவம் குறித்த நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com