பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் - தலைமைச் செயலாளர் சந்திப்பு! 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் சந்திக்கிறார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் - தலைமைச் செயலாளர் சந்திப்பு! 

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் சந்திக்கிறார்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுபேற்ற நான்காவது மாதத்தில் மூன்றாவது அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அதிகாரிகள் அனைவரும் வெளியேறிய நிலையில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் சந்திக்க விரைந்துள்ளார். தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை செய்ய இந்த சந்திப்பு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com