சென்னையில் மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலி

சென்னை, சோழிங்கநல்லூரில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை: சென்னை, சோழிங்கநல்லூரில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோழிங்கநல்லூரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ஒப்பந்த தொழிலாளர்களில் வந்தவாசியைச் சேர்ந்த சுப்பிரமணி உயிரிழந்தார். 20 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய மற்றோரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.

துரைப்பாக்கம், சிறுச்சேரி, கிண்டியைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் 15 தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com