திருபுவனை தொகுதியில் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாது என கோபிகா எம்.எல்.ஏ. வலியுறத்தினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் அவர் பேசியதாவது:
பெண் எம்.எல்.ஏவான எனது தொகுதியில் மதுக்கடைகளை புதிதாக திறக்க தனியாருக்கு எவ்வாறு உரிமம் தருகிறீர்கள். குடியிருப்பு, பள்ளிகள் அருகே மதுக்கடைகளை எவ்வாறு திறக்கலாம். அவற்றை திறக்கக்கூடாது.
பள்ளிகளில் 9-ம் வகுப்பில் பெயில் ஆவது குறித்து பேரவையில் பேசும் நீங்கள் ஏன் மதுக்கடைகள் திறக்க உரிமம் தருவது குறித்து பேசுவதில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றார்.