தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், ஆதாரை அட்டையை தங்களது வயதுச் சான்றாக அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெள்ளிக்கிழமை (மே 26) வெளியிட்டார். 80 -வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள். அவர்களது வயதை உறுதி செய்ய வேண்டிய ஆவணங்கள் இல்லாத நிலையில், முதுமையில் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், ஆதார் அடையாள அட்டையை அவர்கள் வயதுச் சான்றாக சமர்ப்பிக்கலாம் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.