சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, விமான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மத்திய அரசின் அறிவிப்பால் சிறுபான்மையினர், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர். எனவே இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மதவாத சக்தியைப் புகுத்த மத்திய அரசு திட்டம் திட்டி வருவதாகக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.