இறைச்சிக்காக கால்நடைகளை விற்கும் தடை புதுவையில் செயல்படுத்த மாட்டோம்: நாராயணசாமி அறிவிப்பு

இறைச்சிக்காக கால்நடைகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை புதுவையில் செயல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இறைச்சிக்காக கால்நடைகளை விற்கும் தடை புதுவையில் செயல்படுத்த மாட்டோம்: நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: இறைச்சிக்காக கால்நடைகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை புதுவையில் செயல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் இதுதொடர்பாக திமுக, அதிமுக காங்கிரஸ், என்ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்,

அன்பழகன் (அதிமுக): இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு மக்களுக்கு எதிரானது. புதுவையில் 30 சதவீதம் பேர் மாட்டிறைச்சி உணணும் பழக்கம் கொண்டவர்கள். மத்திய அரசின் அறிவிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்படுவர். மேலும் இதனால் இறைச்சி வியாபாரிகள், தோல் தொழில் செய்வோரும் பாதிக்கப்படுவர். பலர் வேலைவாய்ப்பு இழக்க நேரிடும். முதல்வர் இதுதொடர்பாக கட்சி ரீதியில் பதில் கூறியுள்ளார். இதற்கு  எதிராக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றுவது அவசியம்.

சிவா (திமுக): ஆர்எஸ்எஸ் கருத்தை மக்கள் மீது திணிக்கும் பணியை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. இறைச்சிக்கு தடை என்று சர்வாதிகார போக்கை பாஜக மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

அதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அசோக் ஆனந்த், செல்வம் ஆகியோரும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன்: யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மாநில அரசு உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். சட்ட ரீதியான பாதுகாப்பு தர வேண்டும். விவசாயிகள், வியாபாரிகள் பீதியில் உள்ளனர். புதுச்சேரி அரசு நமது நிலைப்பாட்டை சட்ட ரீதியாக தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் கமலகண்ணன்: மத்திய அரசு இந்திய நாட்டில் உள்ள மக்கள் காளைகள், கன்றுகள், ஒட்டகம் ஆகியவற்றை கொன்று உண்ணக்கூடாது. சந்தை விற்பனைக்கு தடை விதித்துள்ளனர்.

முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரி அரசு சார்பில் வன்மையாக கண்டனம் தெரிவித்தேன். மத்திய அரசு பல திட்டங்களை மக்கள் ஏற்காவிட்டாலும் திணிக்கிறார்கள்.ஒருவர் ஆட்டு இறைச்சி எடுத்து சென்றாலும், பசு பாதுகாப்பு இயக்கம் என்ற போர்வையில் படுகொலை செய்வதும் துன்புறுத்துவதும் வடநாட்டில் நடக்கிறது. சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உணவு உண்பதை வற்புறுத்த இயலாது.

வடகிழக்கு மாநிலங்களில் 95 சதவீதத்தினர் மாமிச உணவையே உண்கின்றனர். 40 சதவீத மக்கள் மாமிச உணவு உண்பவர்கள். இதை புறம்தள்ளி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு கலாச்சாரத்தில் வந்தோர் இங்கு அதிகம். புரத சத்தாக மாட்டு இறைச்சி உண்போர் உண்டு. அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளம், கர்நாடகம், தமிழகம், புதுச்சேரியில் எதிர்ப்பு புறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்ததை ஏற்க இயலாது. கர்நாடக, கேரள மாநில முதல்வர்கள் ஏற்பதில்லை என்று கூறியுள்ளார்கள். புதுச்சேரி அரசு சார்பில் மக்கள் நலன் கருதி, எம்எல்ஏக்கள் கோரி்ககை ஏற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்.  மக்கள் எண்ணம்தான் எங்கள் எண்ணம். மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். தேவைப்பட்டால் தனி சட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தாமல் இருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com