சென்னை: சென்னை, எண்ணூர், கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், பாம்பன் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவாகி உள்ளது. இந்தப் புயல் சின்னம் 720 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு எற்றப்பட்டது. இதன், காரணமாக புறநகர் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோரா எனப் பெயரிடப்பட்ட புயல், வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.