சென்னை: சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.8.57 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த ஆண்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.147 கோடி பணம், 177 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அதில், தற்போது நடத்திய சோதனையில் 30 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.