பெங்களூர்: ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஜூன் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ராக்கெட் செலுத்தப்படுவதற்கான கவுண்ட் டவுன் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ செலுத்தவுள்ள ராக்கெட்டுகளில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 தான் அதிக எடை கொண்டது.
இதுபோன்ற ராக்கெட்டுகள் மூலம்தான் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடியும் என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.