சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று திடீரென ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை தியாகராயர் உள்ள சென்னை சில்க்ஸில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, எரியும் தீயை அணைக்க ஹைட்ராலிக் வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.