குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததையடுத்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இரண்டு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து இருந்தது.
கோதையாற்றில் அதிக வெள்ளம் வந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, திற்பரப்பு பேரூராட்சி சார்பில் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.