மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சௌந்தரராஜன் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாகப் பெய்த தொடர் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.