கார்த்திகை தீபத் திருவிழா: 10 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நகரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை 10 நாள்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் மதுக் கடைகள், வரும் நவம்பர் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை 10 நாள்கள் மூடப்படவிருக்கின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே இயங்கி வரும் மதுக் கடை எண் 9269, தேனிமலையில் உள்ள மதுக் கடை எண் 9257 ஆகியவை 10 நாள்களும் மூடி வைக்கப்பட வேண்டும்; நகரில் வேறு எங்கும் மதுபானங்கள் விற்கக் கூடாது. எங்காவது மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.